தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வலி வடக்கில் மரங்களை வெட்டுபவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளை, சுத்திகரிக்கும்போது அந்த பகுதிகளில் உள்ள  மரங்களை அகற்றுவதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி மரங்களை வெட்டுபவர்களிற்கு  எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  விடுவிக்கப்பட்ட வலிவடக்கு  காணிகளின் உரிமையாளர்கள், தங்களை கிராம அலுவலர்களிடம் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி மயிலிட்டி, கட்டுவன், தென்மயிலை, தையிட்டி ஆகிய பகுதிகளில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...