Designed by Iniyas LTD
ஸ்ரீ போலீஸ் மீது கைக்குண்டு வீச்சு!
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேநபர் அவருடைய வீட்டில் இருந்த போது, பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்ட வேளையில், பொலிஸாரை நோக்கி குண்டொன்றை வீசியுள்ளார். அதனையடுத்து, குறித்த நபர் தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவரை கைது செய்வதற்காக பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எனினும், அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.