Designed by Iniyas LTD
10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது!
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அவர் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.