Designed by Iniyas LTD
4 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் தங்தர் பகுதியில் லஷ்கர் – இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. காலை 9.30 மணி வரை துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.