தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ நா வின் விசேட அறிக்­கை­யா­ளர்கள் இலங்கை வரவுள்ளனர்!

showImageInStoryஇலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யா­ளர்கள் இருவர் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

சுயா­தீன நீதி­வான்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் தொடர்­பி­லான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட பிர­தி­நிதி மொனிகா பின்டோ மற்றும் சித்­தி­ர­வ­தைகள் மற்றும் ஏனைய துன்­பு­றுத்­தல்கள், கொடூ­ர­மான தண்­ட­னைகள் குறித்த ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட பிர­தி­நிதி ஜூவான் மென்டிஸ் ஆகி­யோரே எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்­கைக்கு விஜயம் செய்­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது.

அந்த வகையில் சுயா­தீன நீதி­வான்கள் மற்றும்சட்­டத்­த­ர­ணிகள் தொடர்­பி­லான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட பிர­தி­நிதி மொனிகா பின்டோ ஏப்ரல் மாதம் 29 ஆம் திக­தி­யி­லி­ருந்து மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். இதன்­போது இலங்­கையின் நீதித்­து­றையின் சுயா­தீனம் தொடர்பில் இவர் ஆரா­ய­வுள்ளார்.

இலங்­கைக்கு இதற்கு முன்­னரும் ஐக்­கிய நாடு­களின் சில முக்­கிய அறிக்­கை­யா­ளர்கள் விஜயம் மேற்கொண்டு மனித உரிமைகள் மீறள்கள் குறித்து ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...