Designed by Iniyas LTD
மாலைத்தீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்காவில் கைது .
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஊடக பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2.39 கிலோ கிராம் ஹெரோயின் 24.4 மில்லியன் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
