ஏமனில் பல மாதங்கள் பயிற்சி பெற்ற மின் குவாங், அல்கொய்தா தலைவர் அன்வர் அல்-அவ்லக்கியின் உத்தரவின் பேரில் ஹீத்ரூ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
எனினும் அல்கொய்தாவுக்கு பொருளுதவி அளித்தது, அவர்களிடம் இருந்து தீவிரவாத பயிற்சி பெற்றது, எந்திர துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளை கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மின் குவாங் பாமுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நியூயார்க் நீதிபதி அலிசன் நாதன் உத்தரவிட்டார்.