சிரியாவின் ஹோம்ஸ், ஹமா, இட்லிப்,லடாக்கியா மற்றும் அலெப்போ ஆகிய இடங்களி்ல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தெரிய வந்ததாகவும் அம்னெஸ்டி கூறியுள்ளது.
அப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் முகாம்கள் இல்லாத நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.