Designed by Iniyas LTD
ஐ எஸ் தீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைத்து பலி தீர்த்த பெண்!
பழிக்கு பழிவாங்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகளை துண்டித்து ஒரு பெண் சமைத்தார்.
ஈராக்கை சேர்ந்தவர் வாஹிதா முகமது என்கிற உம்ஹனாடி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பல்வேறு தீவிரவாத இயக்கங்களில் இருந்தார். சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொன்று தலை துண்டித்து அவர்களின் தலையை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார்.
அக்காட்சியை போட்டோக்கள் மற்றும் வீடியோ எடுத்துவலை தளங்களில் பரவவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் கூறும் போது, அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் எனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கடத்தி கொன்று விட்டனர்.
அதற்கு பழிவாங்கவே அவர்களின் தலையை துண்டித்து சமைத்தேன் என்றார். எனவே, இவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைவர் அபுபகர் அல்-பக்தாதி தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுவரை 2006 முதல் 2014-ம் ஆண்டு வரை 3 தடவைக்கு மேல் அவரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டனர். ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது. கார்குண்டு தாக்குதலில் இவரது கைகள், தலை உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.