Designed by Iniyas LTD
தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உடனே வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டிய 45 டிஎம்சி நீரை கர்நாடகா இதுவரை வழங்கவில்லை என மனுவில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபற்றி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் ஏற்கனவே முறையிட்டும் அக்குழு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.