Designed by Iniyas LTD
டிஎஸ்பி விஷ்ணுபிரியா – யுவராஜ் ஆடியோ உரையாடல் வெளியானது
கோகுல்ராஜ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் யுவராஜ்- டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் ஆடியோ உரையாடல் வெளியாகியுள்ளது.
இதுதவிர வாட்ஸ் அப்பில் யுவராஜ் வெளியிட்டுள்ள ஆடியோவில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி விஷ்ணுபிரியாவை செயல்படவிடவில்லை எனவும் உயரதிகாரிகள் தான் விஷ்ணுபிரியாவை இயக்கினர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் முன்பே டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை உயரதிகாரிகள் தரக்குறைவாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் உண்மை வெளிவராவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.