தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நவா­லிப் படு­கொலை – 23 ஆம் ஆண்டு நினை­வு­ நாள் இன்று….

இலங்கை வான்­ப­டை­யின் வானூர்­தித் தாக்­கு­த­லில் ஒரே தட­வை­யில் 147 பேரைக் காவு­ கொண்ட நவா­லிப் படு­கொ­லை­யின் 23ஆவது நினைவு நாள் இன்­று.

கடந்த 1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்­டோர் வேர்ட்’ என்ற முன்­னோக்­கிப் பாய்­தல் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யி­னால், நவா­லி­யில் மக்­கள்  ஆலயங்களில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர்.

இலங்கை வான்­ப­டை­யின் காட்டுமிராண்டித்தனமாக மக்கள் தஞ்சம் அடைந்த ஆலயங்கள் மீது  13 குண்­டு­க­ளைத் தொடர்ச்­சி­யாக  வீசி­யது.

வான்­ப­டை­யின் ஈவு­இ­ரக்­க­மற்ற இந்­தக் குண்­டு­வீச்­சில், சிறு­வர்­கள், இளை­ஞர்­கள், முதி­ய­வர்­கள், பணி­யா­ளர்­கள் எனப் பல­ரும் துடி­து­டித்து ஒரு நொடிப் பொழு­தில் சாவைத் தழு­விய கொடூ­ரம் அரங்­கே­றி­யது.

இந்­தத் தாக்­கு­த­லில் சாவைத் தழு­வி­யோர் நினை­வாக, நவாலி சென். பீற்­றர்ஸ் தேவா­ல­யத்­தி­லும், நவாலி சின்­னக் கதிர்­கா­மம் முரு­கன் ஆல­யத்­தி­லும் இன்று சிறப்­புப் பூசை வழி­பா­டு­கள் நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...